Wednesday, 27 March 2013

வாராஹி உபாசனை


வாராஹி உபாசனை

ஸ்ரீ வாராஹி மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்ஐம் க்லௌம்
ஐம் நமோ பகவதி வார்த்தாளி வார்த்தாளி
வாராஹிவாராஹி வராஹமுகிவராஹமுகி
அந்தே அந்தினி நம:
ருந்தே ருந்தினி நம :
ஸ்தம்பே ஸ்தம்பினி நம:
ஸர்வதுஷ்ட ப்ரதுஷ்டானாம்
ஸ்ர்வேஷாம் ஸ்ர்வவாக்
சித்தசக்ஷர் முககதி
ஜிக்வாஸ்தம்பனம் குருகுரு
ஒவ்வொருவரும் அம்பிகையைப் பூஜை செய்வது பூர்வ புண்ணிய பலத்தினால் வருவதுஎதிலும் சக்தியேபிரகாசிக்கிறதுஅந்த சக்தியை ஒரு இடத்தில் நிறுத்தி அதனுடைய பேரருளை பக்தி மார்க்கமாக வாராஹி அம்பாள்என்று நினைவில் வைத்து அம்பாளை லயம் செய்து கொள்வதே உபாசனை என்பதாகும்அவ்வாறு தாங்கள்வாராஹியை உபாசித்தால் சகலவிதமான காரியங்களும் நொடியில் சித்தியாகும்ஆதிசக்தியாகிய பராசக்தியின்படைக்கு சேனாதிபதியாக வாராஹி தேவி அவதரித்தாள்ஆகையால் நாம் வாராஹியை அன்றாடம் வழிபாடு செய்யவேண்டும்

  1. வாராஹிக்கு ஏற்ற மாலை - செவ்வரளி மாலை.
2. 
வாராஹிக்கு ஏற்ற புஷ்பம் - செந்தாமரைவெண் தாமரை.
3. 
வாராஹிக்கு ஏற்ற கிழங்கு - தாமரைக் கிழங்குஅல்லிக் கிழங்குதண்ணீர்விட்டான் கிழங்குமாகாளிக் கிழங்கு,பனங்கிழங்கு.
4. 
வாராஹிக்கு ஏற்ற வாசனைத் தளிர்கள் - மரிக்கொழுந்துகருப்பு துளசிசெந்தாழைமல்லியிழை.
5. 
வாராஹிக்கு ஏற்ற வேர்கள் - வெட்டிவேர்அல்லி வேர்மல்லி வேர்சிறு நன்னாரி வேர்பெரு நன்னாரி வேர்.
6. 
வாராஹிக்கு ஏற்ற வஸ்திரங்கள்-செவ்வண்ண வஸ்திரம் ஹோமத்தில் சேர்க்க வேண்டும்.
7. 
வாராஹிக்கு ஏற்ற நெய்வேத்திய பலகாரங்கள் - கருப்பு உளுந்து வடைபாதாம் கேசரிமுந்திரி உருண்டைஇத்துடன் பானகம் முதலியன.
ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?
மந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறதுலட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்துநீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறதுஆகவேநம்முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும்தங்கள் அனுபவத்தின் மூலம்விளக்கினர்.

1. 
எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம்வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக்காரணமாகிறது.சுக்ல பக்ஷம்கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லதுசதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால்மந்திரம் சித்தியாகிறது.
 
உபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான்அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான்இப்படி ஒரேநாளில்அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்குஉள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும்வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசாரமுறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாதுஅறுபதுநாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம்உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.

2. 
ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம்ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய.நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறதுஆனால் இங்கு கவனிக்கவேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51 ஏறு வரிசையிலும் இறங்குவரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும்இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும்கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமிசுக்லிசதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.

3. 
மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர்இந்த குறிப்பிட்ட திதிகளில்தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம்செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.

4. 
மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளதுஅவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்குமுன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.

5. 
ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறதுஅதிலுள்ள 63 எழுத்துகளைஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம்செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.

6. 
கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கைவரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும்இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம்முதலானவைகளும் செய்ய வேண்டும்இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும்கடைசி நாள் 5716 ஆகும்அந்தந்தநாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.

7. 
சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.

8. 
ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம்செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.

9. 
மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறதுதான் ஸித்தி செய்யவேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச்செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில்ஸித்தியாகிறது.

10. 
மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது.மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் மஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும்மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.

11. 
ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன்மந்திரத்திற்கு முந்தியும்பிந்தியும்சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.

12. 
அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டிஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.
ஜபத்திற்குரிய இடங்கள்
ஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில்கூறப்பட்டுள்ளது.சுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதைஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்தவண்ணம் ஜபம் செய்யவேண்டும்.பூஜை அறைபசுக்கொட்டில்நதிதீரம்கடற்கரைஆசிரமம்ஆலயம்தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்தஇடம்.கிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும்தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும்அக்னிமூலை (தென்கிழக்குநோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும்மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும்.ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும்கிழக்கும்வடக்கும்,நிஷ்காமியமானது.சுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றதுபத்ராஸனம்முக்தாஸனம்மயூராஸனம்,ஸித்தாஸனம்பத்மாஸனம்ஸ்வஸ்திகாஸனம்வீராஸனம்கோமுகாஸனம்சுகாஸனம் என்ற ஒன்பதுநிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம்பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.கருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதிவெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்மான் தோல் மீது ஜபம்செய்தால் ஞானம்புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதிநிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்திசிவப்பு வஸ்திரம் வசியம்கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம்உண்டாகும்.

No comments:

Post a Comment